எனது தந்தைக்கு சமர்ப்பணம்.
உதிர்ந்த
பூவிற்கு
உதிரி பூக்களின்
கண்ணீர் அஞ்சலி.
இப்போதுதான்
வாழ்கையின்
நிதர்சனம் என்னவென்று
புரிகிறது.
விதி
என்னிடமிருந்து
உன்னை பிரித்ததா?
உன்னிடமிருந்து
என்னை
பிரித்ததா?
நீ
என்னை
அடித்தாவது
வளர்த்திருக்கலாம்.
கொடுமைக்கார தகப்பன்
என்று பெயரேடுத்திருக்கலாம் .
நானாவது
அழாமல் இருந்திருப்பேன்.
நீ
எந்த தேசத்தில் இருக்கிறாய்?
சொல். நான் விரைகிறேன்.
உனக்காக
நான் ஆண்டவனிடம்
வழக்காடுகிறேன்.
விதி
வலியது- கேள்விபட்டிருக்கிறேன்.
விதி
வலி இது - உணருகிறேன்.
விதியின்
வலிமையை காட்டிய அவன்
அதை தாங்கும்
வலிமையை பறித்தான்.
உதிர்ந்த
பூவிற்கு
உதிரி பூக்களின்
கண்ணீர் அஞ்சலி.
இப்போதுதான்
வாழ்கையின்
நிதர்சனம் என்னவென்று
புரிகிறது.
விதி
என்னிடமிருந்து
உன்னை பிரித்ததா?
உன்னிடமிருந்து
என்னை
பிரித்ததா?
நீ
என்னை
அடித்தாவது
வளர்த்திருக்கலாம்.
கொடுமைக்கார தகப்பன்
என்று பெயரேடுத்திருக்கலாம் .
நானாவது
அழாமல் இருந்திருப்பேன்.
நீ
எந்த தேசத்தில் இருக்கிறாய்?
சொல். நான் விரைகிறேன்.
உனக்காக
நான் ஆண்டவனிடம்
வழக்காடுகிறேன்.
விதி
வலியது- கேள்விபட்டிருக்கிறேன்.
விதி
வலி இது - உணருகிறேன்.
விதியின்
வலிமையை காட்டிய அவன்
அதை தாங்கும்
வலிமையை பறித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன